6 அல்அன்ஆம்

Monday, September 5, 2011

பெயர்: இந்த அத்தியாயத்தின் 137-144 வரையுள்ள வசனங்கில், சில கால்நடைகளைப் பயனபடுததுவது அனுமதிக்கப்பட்டது என்றும், சில கால்நடைகளைப் பயன்கடுத்துவது தடுக்கப்பட்டது என்றும் அவரபிகள் கொண்டிருந்த மூடநம்பிக்கைளைப் பயன்படுத்துவது தடுக்கப்ட்டது என்றும் அரபிகள் கொண்டிருந்த மூடநம்பிக்கைகளுக்கு மறுப்பளிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டே இந்த இத்தியாயத்pற்கு 'அல்அன்ஆம்' (கால்நடைகள்) என்று பெயரடப்பட்டுள்ளது.

இறக்கியருளப்பட்ட காலம்:
இப்னுன அப்பாஸ் (ரலி) அவர்கள், 'இந்த அத்தியாயம் முழுவதும் மக்காவில் ஒரே நேரத்தில் இங்கியது' என்று அறிவிக்கிறார்கள். முஆத் இப்னு ஜபல் (ரலி) அவரக்ளின் ஒன்றவிட்ட சகோதரி 'அஸ்மா பின் யஜீத்' (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'இந்த அத்தியாயம் நபி (ஸல்) அவர்கள் மீது இறங்கிக் கொண்டிருநதபோது அவர்கள் ஒட்டகத்தில் சவாரி செய்து கொண்nருந்தார்கள். நான் இந்த ஒட்டகத்தின் மூக்குக் கயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்தேன். வஹியின் சுமையைத் தாங்க முடியாமல் ஒட்டகத்தின் எலும்புகள் உடைந்து விடும்போல் எனக்குத் தோன்றியது!' அந்த இரவில் இந்த அத்தியாயம் இறங்கிதோ அதே இரவில் நபி (ஸல்) அவர்கள் இனை எழுதிக் கொள்ளச் செய்தார்கள் என்றும் அறிவிப்புகளிலிருந்து தெரிய வருகிறது.

இந்த அத்தியாயத்தின் கருத்துக்களைச சிந்தித்துப் பார்த்தால், இது நபி (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இறங்கியிருக்க வேண்டும் எனத் தெளிவாய்ப் புலப்படுகின்றது.

இறக்கியருளப்பட்ட சூழ்நிலை:
இந்த அத்தியாயம் இறங்கியபோது அல்லாஹ்வின் தூதர் இஸ்லாத்தின் பக்கம் கமக்களை அழைக்கத் தொடங்கி 12 ஆண்டுகள் கழிந்திருந்தன. குறைஷிகளின எதிர்பபும், கொடுமைகளும், அட்டூழியங்களும் உச்சநிலையை அடைந்திருந்த்ன. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருந்தோரில் பெரும் எண்ணிக்கையினர், குறைஷகளின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் பிறந்த நாட்டைத் துறந்து அபிஸீனியாவில் தஞ்சம் புகுந்திருந்தனர்.

பொருளடக்கம்: இத்தகைய சூழ்நிலையில் தான் இந்த அத்தியாயம் இறங்கியது. அதன் கருத்துக்களை ஏழு கெருந்தலைப்புகளாகப் பிரிக்கலாம்.

(1) ஷிர்க் (இறைபனுக்கு இணைவைத்தல்) அசத்தியமானது என்று நரூபித்தல், ஓரிறைக் கோட்பாட்டின் பக்கம் அழைப்பு வடுத்தல்!

(2) மறுமைக் கோட்பாடடினை எடுத்துரைத்தல்.

(3) அஞ்ஞான கலத்;து மூடநம்பிக்கைகளை மறுத்துரைத்தல்.

(4) எத்தகைய உயர்ந்த ஒழுக்க நெறிகளின் அடிப்படையில் .ஸ்லாம் மனித சமூகத்தை அமைக்க விருப்பியதோ அவற்றைப் பேளும்படி அறிவுறுத்தல்.

(5) நபி (ஸல்) அவர்களுக்கம், அவர்களின் அழைப்புக்கும் எதிராக மக்கள் எழுப்பிய ஆடசேபணைகளுக்குப் பதலளித்தல்.

(6) நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்கள் அனைவர்களுக்பு; பதிலளித்தல்.

(7) இறைமறுப்பாளர்களுக்கும் எதிரிகளுக்கும் அறிவுரைபகர்தல், அச்சுறுத்தி எச்சரிக்கை செய்தல்.

மக்கா வாழ்ககையின் காலகட்டங்கள்: மக்காவில் அருளப்பட்ட ஓர் விரவான அத்தியாயம் இங்குதான் முதன்முதலாக நம் முன் வருகிறது. இந்த இடத்தில் மக்காவில் இறங்கிய இத்தியாயங்களின் வரலாற்றுப் பின்னணியைப் பற்றி ஒரு பொதுவான விளக்கம் அளிப்பது மிகப் பொருத்தமாக இருக்கும். ஏனெனில், இனி வர்ககூடிய மக்கத்து அத்தியாயங்கள் அனைத்தையும் புரிந்து கொள்வதும், அவற்றின் விரிவுரை தொடரபான நம் குறிப்புகளை விளங்கிக் கொள்வதும் இதனால், எளிதாகி விடும்!.

மதீனாவில் இறங்கிய அத்தியாயங்களைப் பொருத்தவரை அவை ஒவ்வொன்றும் இறங்கிய காலகட்டத்தை இலகுவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. அல்லது ஒரு சிறு ஆய்வின் மூலம் அதை நிர்ணயித்திட முடியும்! சொல்லப் போனால் அந்த அத்தியாயங்களின் அனேக வசனங்கள் இறங்கியதற்கான தனித்தனிக் காரணங்கள் கூட நம்பத்தகுந்த அறிவிப்புகள் மூலம் கிடைத்துவிடுகின்றன. ஆனால் மக்காவில் அருளப்பட்ட அத்தியாயங்களுக்குரிய காலம் பற்றி நம்மிடம் அத்தகைய விரிவான விவரங்கள் இல்லை. மக்கத்து அத்தியாயங்களில் மிகக் குறைவான அத்தியாயங்கள் அல்லது வசனங்கள் இறங்கிய காலமும் சந்தர்ப்ப சூழ்நிலையும் பற்றித் தான் நம்பத்தக்க சரியான அறிவிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. இதனால் மக்காவில் அருளப்பட்ட அத்தியாயங்கள் தொடர்பாக வரலாற்று ஆதாரங்களை விட அகச்சான்றுகளையே நாம் அதிகம் நம்ப வேண்டி உள்ளது. பல்வேறு அத்தியாயங்களின் தலைப்பு, கருத்து, விளக்கும் பாணி ஆகியவற்றிலும், அந்த அத்தியாயங்களின் வரலாற்றுப் பின்னணி பற்றி அவற்றில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ உள்ள சமிக்கைகளிலும் அந்த அகச் சான்றுகள் காணப்படுகின்றன. ஆயினும், இத்தகைய அகச்சான்றுகளின் துணைகொண்டு ஒவ்வோர் அத்தியாயத்தைப் பற்றியும் ஒவ்வொரு வசனத்தைப் பற்றியும் இது இன்ன தேதியில், இன்ன ஆண்டில், இன்ன சந்தரப்பத்தில் இறங்கிற்று என்று துல்லியமாக நிர்ணயித்திட முடியாது என்பது வெளிப்படை.

ஓரளவு சரியான முறையில் நம்மால் செய்ய முடிவது இதுதான்:

ஒருபுறம் மக்காவில் அருளப்பெற்ற அத்தியாயங்களின் அகச்சான்றுகளை வைத்துக் கொள்ள வேண்டும். மறுபுறம் நபி (ஸல்) அவர்களுடைய மக்கா வாழ்க்கையில் வரலாற்றையும் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டையும் ஒப்பு நோக்கி பார்த்து எந்த அத்தியாயம் எந்தக் காலக்கட்டத்துடன் தொடர்புடையது என்பதைக் கணித்துவிடவேண்டும். இந்த ஆய்வு முறையைக் கருத்தில் கொண்டு நாம் நபி (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையை உற்று நோக்கினால், அது இஸ்லாமிய அழைப்புப் பணியின் அடிப்படையின் நாற்பெரும் காலக்கட்டங்களாக அமைந்திருப்பதைக் காணலாம்.

முதற்கட்டம்: அண்ணலார் அவர்கள் நபியாக அனுப்பப்பட்டது முதற்கொண்டு நபித்துவத்தை பிரகடனப்படுத்தியது வரையிலுள்ள காலக்கட்டம் - ஏறக்குறைய மூன்றாண்டுகள். இந்தக் காலக்கட்டத்தில் குறிப்பிட்ட சில மனிதர்களுக்கு மட்டும் மறைமுகமாக இஸ்லாமிய அழைப்பு விடுக்கப்பட்டு வந்தது. மக்காவின் பொதுமக்களுக்கு இது பற்றித் தெரியாதிருந்தது.

இரண்டாவது கட்டம்: நபித்துவத்தை பிரகடனப்படுத்திய காலம் முதல் முஸ்லிம்களுக்கு கொடுமைகள் இழைக்கத் தொடங்கிய - அடிக்கடி அவர்களைத் துன்புறுத்தத் தொடங்கிய (pநசளநஉரவழைn) காலம் வரை - அதாவது ஏறத்தாழ இரண்டாண்டுக் காலம்  நீடித்தது. இந்தக் காலக்கட்டத்தில் தான் முதன்முதலாக இஸ்லாத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியது. பின்னர் அந்த எதிர்ப்பு இஸ்லாத்தை ஏற்க விடாமல் தடுக்கும் போக்காக வடிவெடுத்தது. பின்னர் எள்ளி நகையாடல், பரிகாசம் செய்தல், வீண்பழி சுமத்தல், வசை பாடல், பொய்ப்பிரச்சாரம் செய்தல், கோஸ்டி சேர்த்தல் வரை இது சென்றது. இறுதியில் மிகவும் ஏழைகளாயும், பலவீனர்களாயும் ஆதரவற்றவர்களாயும் இருந்த முஸ்லிம்களின் மீது அக்கிரமங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

மூன்றாவது கட்டம்: சோதனைக் காலத்திலிருந்து (அதாவது, நபித்துவத்தின் 5 - ஆம் ஆண்டிலிருந்து) அபுத்தாலிப் மற்றும் கதீஜா (ரலி) ஆகியோர் மரணமாகும் (நபித்துவத்தின் 10-ஆம் ஆண்டு) வரை ஏறத்தாழ 5,6 ஆண்டுகள் நீடித்தது. இந்தக்கட்டத்தில் பகைவர்களின் எதிர்ப்பு மிகக் கடுமையாகிக் கொண்டு செனறது. முஸ்லிம்கள் பலர் மக்காவில் இருந்த நிராகரிப்பாளர்களின் கொடுமைகளையும், துன்பங்களையும் பொருக்க முடியாமல் அபிஸீனியாவை நோக்கி ஹிஜ்ரத் செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்களும், அவர்களின் குடும்பத்தார்களும் மற்ற முஸ்லிம்களும் சமூக - பொருளாதார விலக்கல் செய்யப்பட்டனர். நபி அவர்களும், அவர்களின் ஆதரவாளர்கள், தோழர்கள் அனைவரும் ஷுஅப் அபுதாலிப் கனவாயில் ஊரைவிட்டு விலக்கி வைக்கப்பட்டு இருந்தார்கள்.

நான்காம் கட்டம்: நபித்துவத்தின் 10 ஆம் ஆண்டிலிருந்து 13 - வது ஆண்டு வரை ஏறத்தாழ 3 ஆண்டுகள் நீடித்தது. இக்காலக் கட்டம் நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் உற்ற தோழர்களுக்கும் பயங்கரமான முறையில் கொடுமைகளும், துன்பங்களும் இழைக்கப்பட்டக் காலக்கட்டமாகும். எந்த அளவுக்கெனில் நபி அவர்கள் மக்காவில் இனி வாழ முடியாது என்ற நிலை இதனால் உருவாகியது. இறுதியில் அல்லாஹ்வின் அருளால் மதினாவசிகளான அன்ஸார்களின் உள்ளங்கள் இஸ்லாமிய அழைப்பின் பக்கம் வளர்ந்தன. அவர்களுடைய அழைப்பின் பேரில் நபி அவர்கள் மதீனா நகர் நோக்கி ஹிஜ்ரத் செய்தார்கள்.

மேற்சொன்ன காலகட்டங்கள் ஒவ்வொன்றிலும் குர்ஆனுடைய எந்த அத்தியாயங்கள் இறங்கினாலும் அவற்றில் அந்தக் காலக்கட்டத்தின் தனித்தன்மைகளின் தாக்கங்கள் எடுப்பாகக் காணப்படுகினறன. இத்தகைய அடையாளங்ளை அடிப்படையாகக் கொண்டு இனிவரும் மக்கத்து அத்தியாயங்களின் முன்னுரைகளில் அந்தந்த அத்தியாயங்கள் மக்காவில் எந்தக்காலக்கட்டத்தில் என்பதைப் பார்க்கலாம்.

0 comments:

Post a Comment